Date:

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் இடைநிறுத்த

நேபாளத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

நேபாளத்தில் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டத்தை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பு நேற்று (09) இரவு 10.00 மணி முதல் நாட்டின் இராணுவம் மற்றும் பிற பாதுகாப்புப் படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக நேபாள இராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாள இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை, தீ வைப்பு மற்றும் சொத்துக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்க அந்நாட்டு அரசு எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆரம்பமான இந்த போராட்டாத்தால் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும் ஒரு விலை உண்டு”

இஸ்‌ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்...

எஸ்.எம்.மரிக்கார் ஏற்பாட்டில் கொலன்னாவையில் இப்தார் நிகழ்வு

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச...

இலங்கை ; டீசல் விலை 600 ரூபாய்?

ஏப்ரல் மாதம் ஒரு லீட்டர் டீசலின் விலை 550 ரூபாய் முதல்...

கத்தாரின் பாரிய எரிவாயு கிடங்கு மீது ஈரான் தாக்குதல்.. மசகு எண்ணெய், எரிவாயு விலை அதிகரிப்பு…

கட்டார் நாட்டில் அமைந்துள்ள பிரதான இயற்கை எரிவாயு (LNG) மையத்தின் மீது...