Date:

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் கார் கண்டுபிடிப்பு

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

 

எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பழுதுபார்க்கும் நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணை செய்த போது, ஒருவர் சில நாட்களுக்கு முன்பு வந்து காரை இங்கு விட்டுவிட்டு, சம்பத் மனம்பேரியிடம் கொடுக்குமாறு கூறிச் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரியின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் நாடு தழுவிய அமைதியின்மைக்கு மத்தியில், நேபாளம் லலித்பூரில் உள்ள நகு...

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை?

சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய...

நிஷாந்த உலுகேதென்ன மீளவும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன,...

லும்பினிக்குச் சென்ற இலங்கை யாத்ரீகர்களை வௌியேற்ற நடவடிக்கை

நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன்...