கிராண்ட்பாஸ், மாவத்த பகுதியில் கடந்த 05ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 32 வயதானவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.