Date:

சஜித் – மகா சங்கத்தினருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

கண்டிக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டி, மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்திருந்தாா். ஷ்யமோபாலி மகா நிகாயவின் மல்வத்து விகாரையின் பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரரைச் சந்தித்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஷ்யமோபாலி மகா நிகாயவின் அஸ்கிரி விகாரையின் மகாநாயக்க வரக்காகொட ஞானரத்தன தேரர் மற்றும் கெட்டம்பே ராஜோபவனாராமயின் பிரதம பீடாதிபதியான கெப்பெட்டிகொட சிறிவிமல நாயக்க தேரர் ஆகியோரையும் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளாா்.

தற்போது விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட தற்போதைய பல பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...