Date:

நாவின்ன துப்பாக்கிச் சூடு : 39 வயது சந்தேக நபர் கைது

மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.

விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு...

உணவுக்கு சிறந்த நாடு – இலங்கை எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகில் உணவுக்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் தனது பெயரை நிலை...

வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்...