Date:

அளுத்கம தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கத் தயாரான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த, பொலிஸார் வானத்தை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம தர்கா நகர் பகுதியில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம தர்கா நகர் பகுதியில், இரு குழுக்களிடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 119 என்ற அவசர அழைப்பு மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதன்போது, சந்தேக நபர் ஒருவர் இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்க முயன்றதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது ரிவோல்வர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்கா நகரில் வழக்கு விசாரணை ஒன்றின் போது குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட ஒருவர் மீது அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வட மாகாணத்தில் முஸ்லிம் மீள்குடியேற்றம் – ரிட் மனு தள்ளுபடி

வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக, 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்...

நாடு திரும்பினார் பிரதமர் ஹரிணி

உத்தியோகபூர்வ சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய புதன்கிழமை...

இஷாரா செவ்வந்தி எப்படி தப்பினார்?

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...