ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறுத்த கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரிக்கக் கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
மேலும், ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய பிறப்பித்த பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அவரது சட்டத்தரணிகள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவை கோரியுள்ளபோதும் அந்த உத்தரவை பிறப்பிக்காத மேல் நீதிமன்றம் மனுவை விசாரிக்கும்படி அறிவித்தல் அனுப்பியுள்ளது. குறித்த மனுவை செப்டெம்பர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.