Date:

தென்னகோன் பிணையில் விடுதலை

மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் அமைதிப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (டிஐஜி) தேசபந்து தென்னகோன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுடன் அவருக்கு பிணை வழங்கியதுடன், பயணத் தடையையும் விதித்தார்.

தும்பரா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னக்கோன், ஸூம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் தென்னகோன் 33வது சந்தேக நபர் அல்ல, 37வது சந்தேக நபர் என்றும், 33வது சந்தேக நபர் லியானாட் மெண்டிஸ் என்றும் நீதவான் மேலும் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிறை தென்பட்டது!

இஸ்லாமிய நாட்காட்டியின் எட்டாவது மாதமான ஷஃபான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அகில...

ஆசிரியர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்!

2025 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, இந்த ஆண்டின் ஜனவரி 01...

நனவாகும் தோட்டத் தொழிலாளர்களின் கனவு..!

தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக 2026 வரவு செலவுத் திட்டங்களுக்கு...

தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார்...