Date:

தொழிற்சங்க நடவடிக்கையில் களமிறங்கும் 15 சுகாதார தொழிற்சங்கங்கள்

தாதியர், நிறைவுகாண் மற்றும் இடைநிலை வைத்திய சேவை உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தற்போது தீர்மானித்துள்ள பதவி உயர்வு மற்றும் மண்டல சேவை உள்ளிட்ட கோரிக்கைகுறித்து, நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதுவரையில் சுற்றறிக்கையை வெளியிட முடியாதுபோயுள்ளது.

எனவே கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தங்களது நடவடிக்கையை மீள முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்திய ஆய்வக நிபுணர்கள், ஒளடதவியலாளர்கள், தாதியர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 15 துறைசார் தரப்பினர் இந்தப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...