Date:

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பல அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு நுழையும் பிரதான வீதியின் இரு பக்கங்களும் இரும்பு வேலிகள் போட்டு பொலிஸார் மறித்துள்ளனர். அத்துடன் போக்குவரத்து பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி குறுக்கு வீதிகளும் இரும்பு வேலிகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் குடியிருப்புகள், வியாபார நிலையங்கள் மற்றும் வேலைத்தங்களுக்கு செல்வோர் மட்டுமே உள்நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன், நீதிமன்றத்துக்கு செல்வோர் கடுமையான உடல் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஏனையோரை செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று (26) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர், இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில் இவ்வாறு, கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

மத்தேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 342ஆம் வழித்தடத்தில் சல்கஸ் சந்திக்கருகில் இடம்பெற்ற...

மாத்தறையில் துப்பாக்கிச் சூடு

மாத்தறை பொலிஸ் பிரிவு கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த நபரொருவர்,...

கொழும்பில் போராட்டம்; தடுப்பு போலீசார் குவிப்பு

கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக, பொது ஒழுங்கைப் பராமரிக்கவும், எந்தவித...

4 ஊடகவிலாளர்கள் தியாகிகள் ஆகினர்

காசா நாசர் மருத்துவமனை மீது இன்று (25) திங்கட்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில்...