Date:

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் ஒழிப்பு செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

தமது சேவைக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிட்ஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று(28) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காக, தூதுவர் வழங்கிய ஒத்துழைப்புகளை ஜனாதிபதி இதன்போது பாராட்டியுள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றல், மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும், அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தமது சேவையை சிறப்பாக முன்னெடுக்க இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்காக ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் அமெரிக்க தூதுவர் நன்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவரின் எதிர்கால செயற்பாடுகள் சிறப்புப்பெற, ஜனாதிபதி இதன்போது தமது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி; இளைஞர் ருஷ்தி பிணை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை...

கொழும்பு மாநகர சபைக்கும் தேர்தல் தடை

கொழும்பு மாநகர சபை (CMC) உட்பட பல உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை...

சாமர சம்பத் மீள விளக்கமறியலில்

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,...

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சி.ஐ.டியில்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.       அரசியல்வாதிகள் உட்பட...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373