தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்று (23) 6வது நாளாகவும் தொடருகிறது.
மத்திய தபால் பரிமாற்றத்தில் குவிந்து கிடந்த தபால் பைகளைச் சட்டவிரோதமாக அகற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.