Date:

தேரடி வீதியை சுற்றி வந்த நல்லூரான்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் மஹோற்சவத்தின் 24ஆவது நாளான தேரடி திருவிழா 21.08.2025 அன்று பக்திபூர்வமாக நடைபெற்றது.

கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகளும் கிரியைகளும் நடைபெற்றன.

பின்னர், வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய வேல் பெருமான், வள்ளி மற்றும் தெய்வானை சமேதராக தங்க இடப வாகனத்தில் உள் வீதி வலம் வந்து, வெளி வீதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் இஷ்ட சித்திகளைப் பெற்று மகிழ்ந்தனர். 25 நாட்கள் நடைபெறும் இந்த மஹோற்சவம் 29.07.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, 22.08.2025 அன்று தீர்த்தோற்சவம் மற்றும் மாலையில் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மேலும் பல பிரதேசங்களுக்கு மன்சரிவு அபாயம்.. | மக்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹேட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை...

மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு..!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி...

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை தொடர்பான புதிய அறிவிப்பு..!

சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உயர்தரப்பரீட்சையின் முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு...

அனர்த்த நிலைமை; நீர் விநியோகம் 90 சதவீதம் வழமைக்கு

அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90...