Date:

திடீர் போராட்டத்தை ஆரம்பித்த நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்கள்

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் நாளை மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (20) காலை 8 மணிமுதல் கம்பஹா பொது வைத்தியசாலையில் திடீரென ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்களை கையொப்பமிட வேண்டாம் என கம்பஹா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வழங்கியிருந்தார்.

இந்த அறிவுறுத்தலுக்கு அமைய, இன்றைய தினம் அந்த வைத்தியசாலையின் சகல நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர்களும் தங்களது கடமைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக அந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக கம்பஹா பொது வைத்தியசாலை பணிப்பாளருடன் கலந்துரையாடிய போதிலும், அவர் அதற்கு உரிய பதில் வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, மே மாகாண சபையின் கீழ் உள்ள 31 வைத்தியசாலைகளில் நாளை (21) முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுனர் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பில் இடம்பெறவுள்ள ‘சுவர்க்கத்தை நோக்கிய பாதை’வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக விழிப்புணர்வு மாநாடு

புனித அல்குர்ஆனின் வழிகாட்டல்கள் மற்றும் அறிவியல் ரீதியான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு,...

Breaking சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11...

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத...

விமான விபத்தில் காயமடைந்த அஜித் பவார் காலமானார்

விமான விபத்தில் சிக்கிய இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்...