Date:

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T – 56 ரக துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, 45 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று (15) கைதாகியுள்ளார்.

சந்தேக நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது அவரிடம் இருந்து T – 56 ரக துப்பாக்கி அதற்கு பயன்படுத்தப்படும் மகசின் மற்றும் 14 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் மகசின், 2.5 மில்லிமீற்றர் அளவுடைய 9 தோட்டாக்கள், 9 மில்லிமீற்றர் அளவுடைய 9 தோட்டாக்கள், 3 வாள்கள் மற்றும் 2 கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ்...

பத்தரமுல்லையில் ஓர் உல்லாசத் தீவு

பத்தரமுல்ல பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை...

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் தீர்க்கமான ஒருநாள்...

ஹிஸ்புல்லாஹ்வின் 6 வழக்குகளும் தள்ளுபடி

ரீ.எல்.ஜவ்பர்கான் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...