Date:

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு சீனக்கடலை மையமாகக் கொண்டு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலு கொண்டது. அதற்கு போடூல் என பெயரிடப்பட்டுள்ளது.

 

இந்தப் புயல் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்தக காற்றுடன் ஹீவாலியன், பிங்டூங், யூன்லின் போன்ற மாகாணங்களைத் தாக்கியது.

இதனால் அங்குள்ள நகரங்கள் புயலுக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகின.

அதிகமான மழையின் காரணமான தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதுடன் புயலில் சிக்கி மின் கம்பங்கள், மரங்கள் போன்றன வேரோடு சாய்ந்தன.

இதன் காரணமாக அப் பகுதிகளில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப் புயலில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Big Breaking கொழும்பில் பல வீதிகளில் வெள்ளம்

கொழும்பில் இடி மின்னலோடு பெரு மழை கொட்டிப்பெய்கிறது. அரை மணி நேரத்துக்கும்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு பெருந்தொகை நிவாரணம் – தமிழக முதல்வர் மற்றும் மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி

இலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்...

மேலும் பல பிரதேசங்களுக்கு மன்சரிவு அபாயம்.. | மக்கள் வெளியேற்றம்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தகல பகுதிகளிலும், ஹேட்டன், ரொசெல்லவில் உள்ள மாணிக்கவத்தை...

மீண்டும் பாடசாலைகளைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு..!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி...