பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (12) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் போது கிழக்கு மாகாண தளபதியாகப் பணியாற்றிய அருண ஜயசேகர், தற்போது பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பது, அத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு முரண்பாடு ஏற்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
அதன்படி, இந்த முரண்பாட்டைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்துள்ளது.