Date:

மீண்டும் இலங்கையில் எலிக்காய்ச்சல்

இலங்கையில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார். இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரால் பரவுவதாகவும், தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை காலத்தில் சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக வயல் நிலங்களுக்கு செல்வதால் இந்நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் தீபால் தெரிவித்துள்ளார்.

 

காய்ச்சல் ஐந்து அல்லது ஆறு நாட்கள் நீடித்தால், அது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டும் எனவும், கண்களில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம், வயிற்று வலி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும் அவர் விளக்கினார்.

 

எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை இருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், இந்நோய் சிறுநீரகத் தொற்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளதாகவும் வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்தார்.

 

சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் சேற்று நீர் மற்றும் மாசடைந்த பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மைத்திரி வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது...

டில்வினை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள்

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ்...

இஸ்ரேல் பாராளுமன்றில் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பாராளுமன்றமான க்னெசெட் (Knesset) அமர்வில்...