Date:

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியின், பாலிகேசிரி மாகாணத்தில் நேற்று (10) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.1 ரிக்டர் அளவில் சிந்திர்கி நகரத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் இஸ்தான்புல்லின் வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது.

இந் நிலநடுக்கத்தினால், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தினால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணொருவர் மீட்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நான்கு பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கியிருந்தால் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண்கள் கைது

தெஹிவளையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஒன்பது பெண்கள் கைது...

தெற்கு அதிவேக வீதியில் தீப்பற்றிய லொறி

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு...

வௌிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலி

மொரகல்ல கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி...

பொரளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மூவர் கைது

பொரளை, சஹஸ்புர சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டு...