பயிற்சி முடித்த 1,408 மருத்துவர்களை முதன்மை தர மருத்துவ அதிகாரிகளாக நியமிக்க சுகாதார அமைச்சகம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
ஒக்டோபர் 29, 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் தங்கள் பயிற்சியை முடித்து, தேவையான தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மருத்துவர்கள், அமைச்சகத்தின் மனிதவள முகாமைத்துவ மற்றும் தகவல் அமைப்பு (HRMIS) மூலம் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று பிரதிப் பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) II, வைத்தியர் எச்.எம். அர்ஜுன திலகரத்ன ஒரு அறிக்கையில் அறிவித்தார்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஓகஸ்ட் 11, 2025 அன்று மதியம் 12:00 மணிக்குள் நிகழ்நிலையில் சமர்ப்பிக்க வேண்டும்.