Date:

“நீதிமன்ற கட்டமைப்பு டிஜிட்டல் மயமாகும்”

நாடு முழுவதும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, வியாழக்கிழமை (31) அன்று தெரிவித்தார்.

நீதி நிர்வாகத்தில் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட முறைகளைப் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் வலியுறுத்தினார்.

இலங்கையின் 49ஆவது பிரதம நீதியரசரை வரவேற்கும் சம்பிரதாய நிகழ்வு, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் கலந்து​கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்மொழியப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் முயற்சி தொடர்பாக இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BASL) தலைவருடன் ஏற்கனவே பலமுறை கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக, டிஜிட்டல் முறையை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க நீதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சின் செயலாளருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளதாகவும், இதை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம நீதியரசருக்கு, உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதியரசர்கள், மேல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகள் குழு, சம்பிரதாய அமர்வில் அன்பான வரவேற்பு அளித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர் எஸ்.எம்....

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள்...

செம்மணியில் நேற்று 3 எலும்புக்கூடுகள் அடையாளம்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 3...