Date:

ஜனாதிபதிக்கு சேறுபூசிய குட்டி ஆராச்சி மன்னிப்பு கேட்டார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தை செவ்வாய்க்கிழமை (29) அளித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை அவமதிக்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தமைக்காக நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி மற்றும் இருவரிடமிருந்து ரூ. 10 பில்லியன் இழப்பீட்டு வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோரியிருந்தார். எனினும், ஜனக திஸ்ஸ குட்டி ஆராச்சி தனது நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்து வழக்கை தீர்த்து வைத்தார்.

கொழும்பு ​ மாவட்ட மேலதிக நீதவான் சந்திம ஜீவந்தரா முன் வழக்கு, செவ்வாய்க்கிழமை தீர்த்து வைக்கப்பட்டது.

2023 ஆகஸ்ட் 19, அன்று மத்திய கொழும்பில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு தவறான அகருத்தால் தனது நற்பெயருக்கு சேதம் ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட சேதத்திற்கு பத்து பில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இனி O/L இல்லாமல் A/L படிக்கலாம்

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான...

இஸ்ரேலின் கொடூர தாக்குதலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் தியாகியான பாலஸ்தீனர் எண்ணிக்கை  60,034...

ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளர் இராஜினாமா

ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனையின் தவிசாளரும், மகப்பேறு மருத்துவருமான ஆலோசகர் வைத்தியர்...

இன்று இரவு விண்கல் பொழிவைக் காணலாம்; மக்களுக்கு அரிய வாய்ப்பு

இந்த ஆண்டு காணக்கூடிய முக்கிய விண்கல் பொழிவுகளில் ஒன்றான "சதன் டெல்டா...