Date:

4,000 போலி யுவான் நாணயத்தாள்கள் மீட்பு

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் மற்றும் போலி இரத்தினக் கற்கள் தொடர்பான இரண்டு வேறுபட்ட சம்பவங்களில் *சீன பிரஜைகள் இருவர்* கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஹவத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகளால் 4,000 போலி 100 யுவான் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய சீன பிரஜையொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் 6 கிலோகிராம் 32 கிராம் போலி இரத்தினக் கற்களை வைத்திருந்த 52 வயதுடைய சீன பிரஜையொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு மடிக்கணினி, ஒரு ஐபேட் மற்றும் ஒரு கையடக்க தொலைபேசி ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்  இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

Breaking கொலன்னாவை முனையத்தில் எரிபொருள் விநியோகம் பாதிப்பு

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்திருந்த...

இன்று இரவு வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், வவுனியா, குருணாகல் மற்றும்...

மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

எண்ணெய் விலையாக இருக்கட்டும் அல்லது மின்சாரக் கட்டணமாக இருக்கட்டும், இவை அனைத்தையும்...