Date:

வைத்தியர்களுக்கான இடமாற்றத்தில் சீர்கேடு; பல அரச வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்பு!

தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பல வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்  சமில் விஜேசிங்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் சுகாதார சேவையை  உயர் தரத்தில் வழங்க அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் அவசியமான வைத்தியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும்.

எனினும் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கான பணியிட மாற்றம் வழங்கப்படாமையால் பல வைத்தியசாலைகளில்  வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

அந்தவகையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் இந்த நாட்டில் உள்ளனர்.  அவர்கள் தற்போது கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுதே பணியாற்றி வருகின்றனர்.

இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல அரச வைத்தியசாலைகளின் சேவைகள் எதிர்வரும் நாட்களில் முடங்க வாய்ப்புள்ளது.

சுகாதார அமைச்சின் பின்புல அதிகாரம் மற்றும் கட்டுப்பாடுகளற்ற செயற்பாடுகள் காரணமாக சுகாதார சேவை நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்  தள்ளப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...