Date:

பாதாள தலைவருக்கு போலி பிறப்புச் சான்றிதழ்: பதிவாளருக்கு விளக்கமறியல்

துபாயில் இருக்கும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருமான கெஹெல்பத்தர பாஸ்மேவுக்கு, பதிவு விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்து போலி பிறப்புச் சான்றிதழை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாவாக்கை பிரதேச செயலகத்தின் கூடுதல் பதிவாளர் ருவினி வாசனாவை, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி வியாழக்கிழமை (24) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குற்றப் புலனாய்வுத் துறை, கடத்தல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் 28 ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டார். சந்தேக நபரை ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், பொது அதிகாரியாகக் காட்டிக் கொண்டு போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்கு உதவியதன் மூலம் தண்டனைச் சட்டம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...