துபாயில் இருக்கும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கும்பல் உறுப்பினருமான கெஹெல்பத்தர பாஸ்மேவுக்கு, பதிவு விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்து போலி பிறப்புச் சான்றிதழை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீதாவாக்கை பிரதேச செயலகத்தின் கூடுதல் பதிவாளர் ருவினி வாசனாவை, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி வியாழக்கிழமை (24) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். குற்றப் புலனாய்வுத் துறை, கடத்தல் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் 28 ஆம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டார். சந்தேக நபரை ஆஜர்படுத்திய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், பொது அதிகாரியாகக் காட்டிக் கொண்டு போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்கு உதவியதன் மூலம் தண்டனைச் சட்டம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்