Date:

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு  முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது மூத்த குழந்தை படுகாயமடைந்ததாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் மாரவில, மாரடை பகுதியைச் சேர்ந்த எதிரிசிங்க ஆராச்சிகே வசந்தி சதுராணி எனப்படும் சதாமாலி என்ற 30 வயதுடைய பெண்ணாவார்.

ஏதோ ஒரு வேலைக்காகச் சென்றுவிட்டு வாடகைக்கு எடுக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் தனது பத்து வயது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு, முச்சக்கர வண்டிக்குள் இறந்ததாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவரது பத்து வயது மகன்  மாரவில பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர், மாரவில மாரடை பகுதியில் பிரபல ஹெரோய்ன் மற்றும் பிற போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குடு மாலி என்ற பெண்ணின் மூத்த மகள் என்று கூறப்படுகிறது.

குடு மாலி என்ற   பெண், போதைப்பொருள் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு பல முறை போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பெண் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில்,  குடு மாலியின் மூன்று மகள்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட பெண்ணும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளார்,

மேலும் தாயும் மூன்று மகள்களும் மராடை உட்பட பல பகுதிகளுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகவும், இதன் விளைவாக, பல இளம் உயிர்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, பொதுமக்களின் பெரும் அதிருப்திக்கு ஆளான ஒரு குடும்பமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தற்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையை நடத்தி வரும் மாரவில பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல பிரிவுகளின் மூலம் பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன, மேலும் இது போதைப்பொருள் தொடர்பான தகராறின் விளைவாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

சம்பூர் மனித புதைகுழி: 30 க்கு பின்னர் தீர்மானம்

எஸ்.கீதபொன்கலன் சம்பூரில் மனித மண்டையோடு மற்றும் எலும்பு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட காணியில் தொடர்ந்து...