நேற்று (22) நடைபெற்ற நாணயக் கொள்கை சபை கூட்டத்தில், நாணயக் கொள்கை நிலைப்பாட்டைப் மாற்றாமல் தொடர்ந்து பராமரிக்க முடிவு செய்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, ஒருநாள் கொள்கை வட்டி விகிதம் (OPR) 7.75 சதவீதமாக மாறாமல் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய போக்குகளை கருத்தில் கொண்டு மத்திய வங்கி இந்த முடிவை எட்டியுள்ளது.