Date:

ரம்புட்டான், மங்குஸ்தான் உட்கொள்ளும் மக்களிடம் விசேட கோரிக்கை

ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும் இடங்களை அவை உருவாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேராவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலப்பகுதியில் ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்கள் ஏராளமாக நாடுபூராகவும் விற்பனைசெய்யப்பட்டு வருகிறது.

எனினும், பழங்களின் தோல்களை பொதுமக்கள் முறையாக அப்புறப்படுத்தாததால் மீண்டும் ஒரு கொடிய நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் தோல்கள் டெங்கு பெருகும் இடங்களை உருவாக்கக்கூடும் என்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதைத் தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள சீமாட்டி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரம்புட்டான் மற்றும் மங்குஸ்தான் விளைச்சல் பருவகாலம் தற்போது ஆரம்பித்துள்ளதால் பலர் இந்தப் பழங்களின் தோல்களை எல்லா இடங்களிலும் வீசுவதைக் கவனித்ததால், இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி டெங்கு நுளம்புகள் இனப்பெருக்கம் செய்ய பழத்தோல் போன்ற ஒரு சிறிய இடம் கூட போதுமானது என்றும் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பேருவளை நகர சபையில் நடந்தது என்ன..?

பேருவளை நகர சபையின் தலைவர் தேர்ந்தெடுப்பு வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி...

Breking ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15)விசாரணைக்கு...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...