ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக காலி முகத்திடல் வீதி கொழும்பு – கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி அதிபர், ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளது.