Date:

ஹஜ் யாத்திரிகர்களை பதிவு செய்தல் – 2026

ஏ.எஸ்.எம்.ஜாவித்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் உம்ரா குழுவுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1447) ஹஜ் கடமையினை நிறைவேறறுவதற்கு உத்தேசித்துள்ளவர்களி;டமிருந்து விண்ணப்பங்களை கோருகின்றது.

இதனடிப்படையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக Online மூலம் http://muslimaffairs. Info/ hajjapplications 26/create) தங்களது பதிவினை 2025.07.03 திகதியிலிருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இதுவரை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தருகின்றோம்.
புதிதாக பதிவினை மேற்கொள்பவர்கள் 2026 ஆம் ஆண்டு தமது ஹஜ் பயணத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பதிவுக் கட்டணமாக மீளளிக்கப்படாத தொகையான 5000.00 ரூபாவினை MRCA Hajj Account No 2327593 Bank of Ceylon , Hyde Park Branch என்ற வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச் சீட்டினை திணைக்களத்திற்குச் சமர்ப்பித்து தங்களது ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பாக பதிவுக் கட்டணமாக மீளளிக்கப்படாத 5000.00 ரூபாவினை மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலக்கம் தவிர்ந்த ஏனைய வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு பணம் வைப்பிலிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
2025ம் ஆண்டு ஹஜ் பயணத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பதிவுக்கட்டணமாக ரூபா 5000.00 இனை செலுத்தி பின்னர் ஹஜ் பயணத்தினை மேற்கொள்ள முடியாமல் போனவர்கள் 2026 ஆம் வருடம் ஹஜ் பயணத்தினை மேற்கொள்ள உத்தேசித்திருப்பின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தின் பதிவினை மேற்கொள்ளுமாறும்;, பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களுக்கு 2026 வருடம் ஹஜ் பயணத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களத்தின் பணிபப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவிக்கின்றார்.
மேலதிக விபரங்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 0112667901 தொலைபேசி இலக்கத்தினூடாக ஹஜ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா!

தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள்...

50000 இளைஞர்களுக்கு “Next Sri Lanka” திட்டத்தில் வேலைவாய்ப்பு!

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், பிற அமைச்சகங்களுடன் இணைந்து, 200,000 குறைந்த வருமானம்...

தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (12) தங்க விலை 4,000...

வவுனியாவில் ஏற்பட்ட பதற்றம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம்

வவுனியா - கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச...