Date:

2025 ஆம் ஆண்டு மே மாத ஏற்றுமதி செயல்திறன் குறித்து ஒன்றிணைந்த கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிவிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி மே 2025 இல் சீராக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 0.63% குறைந்துள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பு 356.08 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஏற்றுமதி 5.15% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மற்ற சந்தைகளுக்கான ஏற்றுமதி 11.1% அதிகரித்துள்ளது, ஆனால் இது பல முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஏற்பட்டது என்று ஒன்றிணைந்த கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 7.59% மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 6.81% குறைந்துள்ளது, இது மேற்கத்திய நுகர்வோர் சந்தைகளில் தேவையின் ஏற்ற இறக்கத்தை தொடர்ந்து காட்டுகிறது.

மே 2025 இல் இந்த சரிவு இருந்தபோதிலும், அந்த ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான மொத்த வருவாய் 9.8% அதிகரித்து 2.02 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது, இது ஆடை ஏற்றுமதியில் வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இங்கிலாந்து தவிர்த்து, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத சந்தைகளுக்கான ஏற்றுமதியும் 15.36% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்தது, அதே நேரத்தில் பாரம்பரியமற்ற சந்தைகள் 13.12% வளர்ச்சியடைந்தன. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கான ஏற்றுமதிகளில் மிதமான இலாபங்கள் பதிவாகியுள்ளன, அவை முறையே 6.52% மற்றும் 3.74% ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த ஆடை சங்கங்களின் ஒன்றியம், கைத்தொழில்துறையின் வருடாந்தரச் செயற்பாடு, மூலோபாய சந்தைக்கு மாறுவதாலும், பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளில் தொடர்ச்சியான முதலீடுகளாலும் உந்தப்பட்ட நெகிழ்ச்சித்தன்மையையும், தகவமைப்பையும் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டது. ஐரோப்பிய பிராந்திய சந்தையின் சாத்தியக்கூறுகள் தங்களை ஊக்குவிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த ஒன்றியம் மேலும் கூறியது.

இங்கு JAAF, இந்த முன்னேற்றத்தைத் தொடர்வதற்கும், நீண்டகாலப் போட்டித்தன்மைக்கு வாய்ப்பளிப்பதற்கும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் ஒரு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய வர்த்தகக் கொள்கையின் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் IRIS Bushehr கப்பலை திருகோணமலைக்கு அனுப்ப நடவடிக்கை

ஈரானுக்குச் சொந்தமான 'IRIS Bushehr' கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு...

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் – இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம்...

Breaking நாட்டின் பல பகுதிகளில் திடீர் மின்தடை

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு...