Date:

நிதி சேகரிக்கும் பாடசாலைகள் மீது நடவடிக்கை

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க பாடசாலைகளில் இவ்வாறு மாணவர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாடசாலைகளில் நிதி சேகரிக்கப்படுவதாக கூறப்படும் முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்கப்படவுள்ளது.

பாடசாலைகளில் நடைபெறும் உற்சவங்களுக்காக அவ்வாறு மாணவர்களின் பெற்றோர்களிடம் நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என கல்வியமைச்சு ஏற்கெனவே சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ள நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

அதனை ஆராய்வதற்காகவே குழுவொன்று நியமிக்கப்படுவதாகவும்

எவ்வாறாயினும், அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களிடம் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...