Date:

“கச்சத்தீவை இலங்கை விட்டுக்கொடுக்காது”

கச்சத்தீவை இலங்கை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் கூறியுள்ளார்.

 

“இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எங்கள் இராஜதந்திர வழிகள் திறந்தே உள்ளன. ஆனால், இலங்கையின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க இலங்கை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது என்பது உறுதி. இது சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்ட கச்சத்தீவு,” என்றும் கூறியுள்ளார்.

 

கடந்த வாரம் ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே விஜித ஹெராத் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

ஜூன் 27 அன்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை இந்திய மீனவர்களைக் கைது செய்யும் பிரச்சினைக்கு1975ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட அவசரநிலையின் போது, கையெழுத்திடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் காரணமாகும், இதன் கீழ் சில குறிப்பிட்ட பகுதிகளில் மீன்பிடிக்கும் உரிமைகள் கைவிடப்பட்டுள்ளன.

 

இருப்பினும், அமைச்சர் ஹெராத் இந்தப் பிரச்சினையை நிராகரித்து, கச்சத்தீவு பிரச்சினையில் முரண்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கும் (பாஜக) எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான அரசியல் மோதல்கள் என்று கூறியுள்ளார்.

 

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைவதாக குற்றம் சாட்டிய ஹெராத், அவர்கள் மீன்பிடி வளங்களை கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், கடல் தாவரங்களையும் சேதப்படுத்துகிறார்கள் என்றும் ஆனால் இந்திய அரசாங்கம் இலங்கை கடல் பகுதியில் தொடர்ந்து சட்டவிரோத மீன்பிடித்தலை ஆதரிக்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை ஒரு சர்ச்சைக்குரிய ஒன்றாகும், இலங்கை கடற்படையினர் பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தீவு நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

நாளை முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் பிரகடனம்

தேசிய விபத்து தடுப்பு வாரத்தை அறிவிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,...

தென்னிலங்கையில் விசேட சோதனை – 457 பேர் கைது

காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு...

ஒன்றரை கோடி பெறுமதியான மதுபானம் மற்றும் ஏலக்காய் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒரு கோடியோ 50 லட்சம் பெறுமதியான மதுபானம்...