Date:

ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை

வங்​கதேசத்​தில் பிரதம​ராக இருந்த அவாமி லீக் கட்​சித் தலை​வர் ஷேக் ஹசீ​னா​வுக்கு எதி​ராக கடந்த ஆண்டு மாணவர்​கள் தொடர் போராட்​டம் நடத்​தினர். இது வன்​முறை​யாக மாறிய தையடுத்​து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்​கால அரசு அமைந்​தது.

இதையடுத்​து, சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யத்​தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்​வேறு வழக்​கு​கள் பதி​வாகி உள்​ளன. இந்த வழக்கை விசா​ரித்த தீர்ப்​பா​யம் ஹசீனா ஆஜராக உத்​தர​விட்​டது. ஆனால் அவர் ஆஜராக​வில்​லை. இதையடுத்து நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில், ஐசிடி-​யின் தலை​வர் நீதிபதி முகமது குலாம் முர்​துசா மஜும்​தார் தலை​மையி​லான 3 பேர் அடங்​கிய அமர்​வு, நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் ஹசீ​னா​வுக்கு 6 மாதம் சிறை தண்​டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்​கியது. வங்​கதேசத்​திலிருந்து தப்​பிய பிறகு ஹசீ​னா​வுக்கு சிறை தண்​டனை வழங்​கப்​பட்​டிருப்​பது இது​தான் முதல் முறை என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...