மின்சார திருத்த சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என்றும், பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மையுடன் அங்கீகரிக்கப்படலாம் என்றும், அதே நேரத்தில் அது வாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என பிரதிசபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (30) அறிவித்தார்.
இருப்பினும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அதை எளிய பெரும்பான்மையுடன் அங்கீகரிக்க முடியும் என்று நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளது என்றும் சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறிவிப்பின் போதே, உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவிக்கும் போதே, மேற்கண்ட வியாக்கியானத்தை அறிவித்தார்.