Date:

மாலைதீவு ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு விஜயம்

நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கு கல்விசார் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் 25.06.2025ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.

ஆவணக் காப்பகங்கள் மற்றும் பதிவேடுகளைப் பேணுவது மற்றும் அவற்றை முகாமைத்துவம் செய்வது குறித்து அறிந்து கொள்வதே இந்தக் கல்விசார் விஜயத்தின் பிரதான நோக்கமாகும். குறித்த விடயங்கள் தொடர்பில் இலங்கைப் பாராளுமன்றம் பின்பற்றும் முறைகள் குறித்து இவர்கள் அறிந்துகொண்டனர்.

இந்தக் குழுவினர் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் சியாத் அஹமட் அவர்களுடன் கலந்துரையாடியதுடன், பாராளுமன்ற பதிவுகள் மற்றும் ஆவணங்களைப் பதிவுசெய்வது மற்றும் அவற்றைக் பாதுகாப்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார்.

இவர்கள் பாராளுமன்றத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டதுடன், ஆவணக் காப்பகத்தையும் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...

ஸ்ரீலங்கன் முறைகேடுகளை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணைக் குழுவின் விசேட அறிவிப்பு

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும்...