Date:

முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (25) 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க இந்த தீர்ப்பை வழங்கினார்.

மேலும், பிரதிவாதிக்கு 30,000 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 26 இன் கீழ் இலஞ்சத் தொகையை அபராதமாக வசூலிக்கவும் அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலதிகமாக ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சட்டத்தரணிக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க பிரதிவாதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

2016ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் திகதியன்று பிரதிவாதி தொடர்புடைய இலஞ்சத்தைப் பெற்றபோது, இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

மேலும், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 67 வயதுடைய முன்னாள் காணி அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...

ஹல்துமுல்லையில் கோர விபத்து: சாரதி பலி

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை -...