Date:

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இரண்டு மாத காலத்திற்குத் தேவையான எரிபொருளை பெறுவதற்கான திட்டத்தை உறுதி செய்துள்ளதால் நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

எந்த பிரச்சனையும் இல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளோம். எந்த காரணத்தாலும் இந்த நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் .

எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, 92 ஒக்டேன் பெற்றோலில் பெரும்பாலானவை போர் நடைபெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை.

அந்த எண்ணெய் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எங்களுக்கு வருகிறது. ஓமானிலிருந்து ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.

ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டாலும், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. அதன் விற்பனையாளர்களிடம் கலந்துரையாடி எரிபொருள் இறக்குமதியை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளோம்-என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நுவரெலியா அஞ்சல் கட்டிடம்: அமைச்சரவை தீர்மானம் இரத்து

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு 2024.04.29...

துஷார உபுல்தெனியவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்...

ஜூலை 09 : அனைத்து பாடசாலைகளிலும் விசேட வேலைத் திட்டம்!

பாடசாலை டெங்கு ஒழிப்பு தினமாக ஜூலை 09 ஆம் திகதியை  பிரகடனப்படுத்தி...

அர்ஜுன் அலோசியஸ் வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தின் உத்தரவு!

மெண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான வழக்கு வரும் ஜூலை...