Date:

கட்டாரில் ஈரான் தாக்குதலின் சேத விவரம் இது தான்!

கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்புக்களும், காயங்களும் எவருக்கும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் தாக்குதலை அடுத்து நேற்று கட்டாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் குறித்து ஈரான் தெரிவிக்கையில், தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கான பதிலடி இது என்றது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய மோதல் அதிகரித்து வருவதால், சமீப நாட்களாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் ஆறு ஏவுகணைகள் என்றும் அமெரிக்கா 14 ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தி தளம், 19 ஏவுகணைகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என கட்டார் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு சில மணிநேரத்திற்கு முன்னதாக, கட்டாரில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்களை “பாதுகாப்பான இடங்களுக்கு” செல்லுமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அறிவுறுத்தியது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. அத்துடன் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இஸ்ரேல் – ஈரான் தாக்குதலில் 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்ததாகவும் இருதரப்பு அரசு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலவும் குளிரான காலநிலையில் பரவும் வைரஸ் நோய்கள்!

நிலவும் குளிர்ச்சியான வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் காணப்படுவதாக சுகாதாரத்...

தங்க விலையில் இன்றும் அதிகரிப்பு – புதிய விலை இதோ

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்தும் உயர்ந்து வருவதன் காரணமாக இலங்கையில்...

புதிய 2,000 ரூபாய் நாணயத்தாளிலுள்ள அம்சங்கள்

நாட்டின் நடைமுறையிலுள்ள 2,000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது. இலங்கை...

ரமழான் சிறப்பு சுற்றறிக்கை வெளியானது

வரவிருக்கும் ரமழான் காலத்தில் மத அனுஷ்டானங்களை நிறைவேற்ற பொது அதிகாரிகளுக்கு சிறப்பு...