உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து நடைபெற்ற முடிந்த தெரிவுகளில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தெரிவில் ஆரம்பமாக பலாங்கொடை நகர சபை மற்றும் தனமல்வில பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தை நிறுவியுள்ளது.
அதேபோன்று இன்றும் இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் அமர்வுகளின் போது நடைபெற்ற தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
அதன்படி, தேசிய மக்கள் சக்தி இதுவரை மொத்தம் 200 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றி ஆட்சி அதிகாரங்களை நிறுவவுள்ளது என்று மக்கள் விடுதலை முன்னணி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.