Date:

Breaking: அதிகரிக்கும் போர் காரணமாக திருப்பி விடப்பட்ட ஸ்ரீலங்கன் விமானங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.

இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகனண தாக்குதலை நடத்தியது.

இதனால் கட்டார் மற்றும் குவைட் போன்ற நாடுகள் தங்களது வான்வெளியியை தற்காலிகமாக மூடியுள்ளன.

இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியது ஈரான்

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை...

கட்டாருக்கு அச்சுறுத்தல்? வான்வெளியை மூடியது கட்டார்

கட்டாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தங்கள் குடிமக்களுக்கு அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்து...

“பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு”

சோசலிஸ இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 'பலஸ்தீனத்துக்கு வாழ இடங்கொடு' எனும் தொனிப்பொருளின்...

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி...