கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ஈரானின் Tasnim செய்தியை மேற்கோள் காட்டி அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, “வெற்றி அறிவிப்பு” என்று அழைக்கப்படுகிறது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து பழிவாங்கும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.