தனது 70 வயது காதலியிடம் இருந்து ரூ. 1 இலட்சத்து 60,000 பெறுமதியான தங்க நகைகளைச் கொள்ளையடித்து தப்பிச் சென்ற காதலனும் திருட்டுக்கு உதவிய காதலனின் நண்பரையும் வாஹல்கட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள வாஹல்கட பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய பெண்ணின் காதலன் என்று கூறப்படும் 30 வயதுடைய ஒருவரும் அவருக்கு ஆதரவளித்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
