ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதிக்க சபாநாயகர் இன்று நேரம் ஒதுக்க மறுத்ததைத் தொடர்ந்து இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இதனை தெரிவித்தார்
சபையில், எதிர்க்கட்சி சார்பில் 5 தமிழ் உறுப்பினர்கள் மாத்திரமே உள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதன்போது, ஜனாதிபதி சபைக்கு வந்த நிலையில், இன்று நாங்கள் மாத்திரமே உள்ளோம் என சாணக்கியன் தெரிவித்தார்.