Date:

வாழைச்சேனையில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும், மனைவியும் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்து சூட்சுமமான முறையில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனை அவதானித்த பிரதேச மக்கள் போதைப்பொருள் வாங்க வந்த நபரை மடக்கிப் பிடித்ததுடன், வீட்டில் இருந்த கணவனும், மனைவியும் வீட்டை விட்டு தப்பிச் செல்லாத வகையில் வீட்டு நுழைவாயிலுக்குப் பூட்டுப் போட்டு அவர்களை சுமார் 10 மணிநேரமாக பிடித்துவைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததக்கமைய பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் சம்பவ இடத்துக்கு சென்று கணவன், மனைவி இருவரையும் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Justin அமெரிக்காவுடன் இனிப் பேசி அர்த்தமில்லை -ஈரான்

இஸ்ரேலின் “அநாகரிகமான” தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்...

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி...

ஈரான் – இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373