தன்னுடைய காதலியின் நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட பௌத்த துறவிக்கு இலகு வேலையுடன் கூறிய ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரத்தைச் சேர்ந்த ஒரு துறவிக்கே, கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, இந்த தண்டனையை வியாழக்கிழமை (12) விதித்தார்.
அவர் தனது காதலியிமிருந்து பிரிந்த பிறகு அவர் நெருக்கமாக இருந்த வீடியோக்களை ஆன்லைனில் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்காக, பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 2,500 அபராதமும் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்குமாறும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவர் மேலும் மூன்று மாத சிறைத்தண்டனையை கடுமையாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
வாட்ஸ்அப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு அவர் இந்த தண்டனையை விதித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த தண்டனையை விதித்தார்.
சந்தேக நபரான துறவியும் முறைப்பாட்டாளரும் வாட்ஸ்அப் மூலம் சந்தித்ததாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்த சிஐடி. அவளை அடையாளம் கண்ட பிறகு, துறவி முறைப்பாட்டாளரை அனுராதபுரத்தில் யாத்திரை செய்ய அழைத்தார்.
தனது கணவனுடன் பல முறை அனுராதபுரத்துக்கு யாத்திரை மேற்கொண்ட முறைப்பாட்டாளர், சந்தேக நபரான துறவியின் விஹாரையில் உள்ள கபனாக்களில் தனது கணவருடன் தங்கியிருந்தார்,
விஹாரைகளில் கபனாக்கள் உள்ளதா என்று முறைப்பாட்டாளரிடம் நீதவான் வினவினார்.
இதற்கு பதிலளித்த சிஐடி, சந்தேகத்திற்குரிய துறவி தங்குமிட வசதிகளை வழங்கும் அறைகளை கபனாக்கள் என்று குறிப்பிட்டதாகக் கூறியது.
முறைப்பாட்டாளர் பின்னர் சந்தேகத்திற்குரிய துறவியை தனது வீட்டில் யாத்திரை செய்ய அழைத்தார், மேலும் அழைப்புக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது கணவர் வேலைக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பிறகு, இருவருக்கும் இடையே ஒரு காதல் உறவு இருந்ததாகவும், அவ்வப்போது வீடு மற்றும் ஹோட்டல்களில் தங்கிருந்துள்ளனர். மேலும் அவர்கள் பிரிந்த பிறகு, அவர் தனது கணவருக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்புடைய வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபர், தனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டால் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
இருவரின் சம்மதத்துடன் தொடர்பு இருப்பதாகவும், முறைப்பாட்டாளரின் கணவருக்கு இந்த விவகாரம் தெரியும் என்றும் கூறினார்.
முறைப்பாட்டாளரின் கணவருக்கு எதுவும் தெரியாது என்று வாக்குமூலம் அளித்ததாகக் சிஐடி கூறியது.
தொடர்புடைய வீடியோக்களைப் பார்த்த பிறகு தனது வாழ்க்கை துயரமானது என்று கணவர் கூறியதாகவும் கூறப்பட்டது.
இரு தரப்பினரின் பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேக நபரான துறவி, புகார் அளிக்கப்பட்டால் குற்றத்தை ஒப்புக்கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததால், அவரை ஐந்து லட்சம் ரூபாய் சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
தொடர்புடைய பிணையை தாக்கல் செய்ய முடியாத சந்தேக நபரான துறவி, மூன்று நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் ஒரு உத்தரவாதத்தை முன்வைத்து விடுவிக்கப்பட்டார்.
பின்னர் வழக்கு மீண்டும் அழைக்கப்பட்டது., மேலும் இணையத்தில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதற்காக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சிஐடி வழக்குப் பதிவு செய்தது. வழக்கை பரிசீலித்த நீதவான், குற்றம் சாட்டப்பட்டவருக்கு லேசான வேலையுடன் கூடிய ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தார்.