Date:

கெஹெலிய வீட்டுப் பணிப்பெண் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுப் பணிப்பெண் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால், புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டார்.

சுகாதார அமைச்சகத்திற்கு பெயரளவு நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த பணிப்பெண், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு புதன்கிழமை (11) அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காதலியின் ஆபாசத்தை பகிர்ந்த பிக்குவுக்கு சிறை

தன்னுடைய காதலியின் நிர்வாண புகைப்படங்களை, இணையத்தளத்தில் பதிவேற்றிய குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட பௌத்த...

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் இலங்கை!

அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்திய விமான விபத்தில் பல உயிர்கள் பலியானது...

Air India விமான விபத்தில் 133 பேர் உயிரிழப்பு; மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர்...

மரக்கிளை விழுந்ததில் ஒருவர் மரணம், 17 மாணவர்கள் காயம்

பலாங்கொடை ரஜவக மகா வித்தியாலயத்தில் உள்ள கட்டிடமொன்றின் மீது அருகிலிருந்த மரத்தின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373