தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட நியமனங்கள் தொடர்பாக அரசாங்கம் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால், அனைத்து கல்வி தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.