மட்டக்குளிய சமித் பகுதியில் T-56 துப்பாக்கியை வைத்திருந்த மட்டக்குளியவைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.சந்தேக நபரிடம் 29 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
கைது செய்யப்பட்டவர், நாடளாவிய ரீதியில் நடந்த குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கையுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.