நாத்தாண்டிய பிரதேச சபையின் ஆரம்ப அமர்வின் போது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூற்றுப்படி, நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக, அவர்களை நோக்கி எரிச்சலூட்டும் மற்றும் அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததால் பதற்றம் அதிகரித்தது. இந்தக் கருத்துக்கள் வாய்மொழி மோதலுக்கு வழிவகுத்ததாகவும், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கலவரம் வெடிப்பதைத் தடுக்குமுகமாக பொலிஸ் அதிகாரிகள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.